சேலத்தில் மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.சேலத்தில் அனைத்து பள்ளிகள் கலந்துகொண்ட விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரோகிணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பள்ளி மாணவ மாணவிகள் அரசு பொதுத்தேர்வில் எளிதாக வெற்றிபெற தமிழக கல்வித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட பயிற்சி புத்தகங்களை மாணவர்களுக்கு ஆட்சியர் ரோகிணி வழங்கினார். மாவட்ட முதன்மை அலுவலர் ஞானகவுரி உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.