ஆப்கானில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள அப்துல்லா சதுக்கத்தின் அருகே தேசிய பாதுகாப்பு இயக்குனரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது இன்று காலை தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
Home உலகச்செய்திகள் ஆப்கானில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்..!